சேலம் மாநகராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை

சேலம் மாநகராட்சி அலுவலகத்தை  தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை
Updated on
1 min read

சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நிலுவை சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். சங்க பொதுச் செயலாளர் ஜீவானந்தம் தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் நாராயணன், மகாலிங்கம், ரகுபதி தலைமையில் வந்திருந்த தூய்மைப் பணியாளர்கள், கடந்த மூன்று மாதமாக வழங்காமல் நிலுவை வைத்துள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற அனைத்துப் பிரிவு பணியாளர்களுக்கும் நிலுவை வைக்காமல் ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், என்பதை வலியுறுத்தி, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, முழக்கமிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in