மக்கள் நலப்பணியாளர் தற்கொலை முயற்சி

மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தமிழரசன்.
மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தமிழரசன்.
Updated on
1 min read

இந்நிலையில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் (50) என்பவர் திடீரென ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள ஒரு மரத்தில் ஏறினார். தொடர்ந்து, போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என முழக்கமிட்டார். தீயணைப்பு வீரர்கள், போலீஸார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பின்னர், வீரர்கள் மரத்தில் ஏறி அவரைக் கயிறு மூலம் கீழே இறக்கி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in