கரூர் வைஸ்யா வங்கி சார்பில் அரசுப் பள்ளியில் புதிய கட்டிடங்கள் திறப்பு

கரூர் வைஸ்யா வங்கி சார்பில்  அரசுப் பள்ளியில் புதிய கட்டிடங்கள் திறப்பு
Updated on
1 min read

கரூர் வைஸ்யா வங்கியின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.2.25 கோடியில் கரூர் டெக்ஸ் சிட்டி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து கரூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 15 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 1 ஆசிரியர் அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. புதிய வகுப்பறை கட்டிடங்களை ஆட்சியர் சு.மலர்விழி நேற்று திறந்து வைத்தார்.

கரூர் நகராட்சி ஆணையர் கே.எம்.சுதா, கரூர் வைஸ்யா வங்கி இயக்குநர்கள் எம்.கே.வெங்கடேசன், ஆர்.ராம்குமார், கரூர் டெக்ஸ் சிட்டி ரோட்டரி சார்பில் இத்திட்டத்தின் தலைவர் ஏ.ஜே.சூர்யநாராயணா, ரோட்டரி முன்னாள் ஆளுநர் பி.கோபாலகிருஷ்ணன், சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in