பாணாவரம் ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது

பாணாவரம் ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது
Updated on
1 min read

பாணாவரம் அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள் ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த ரங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியானந்தன் (33). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி. இவர், நேற்று முன்தினம் இரு சக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்றபோது மர்ம நபர்கள் அவரை வழி மறித்து கொலை செய்துவிட்டு தப்பினர். இதுகுறித்து பாணாவரம் காவல் ஆய்வாளர் பாரதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அதில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மதுபோதையில் ஏற்பட்ட முன்விரோத தகராறில் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக பாணாவரம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த நிஷாந்த், வாலாஜா பாலாறு அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த வினோத்குமார், பிரதீப் மற்றும் வாலாஜாவைச் சேர்ந்த சேட்டு ஆகியோரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in