2-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

2-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள்  போராட்டம்
Updated on
1 min read

விழுப்புரத்தில் நேற்று 2-வது நாளாக அங்கன்வாடி ஊழி யர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

அங்கன்வாடி பணியாளர் களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம்,கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டங் களைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று முன்தினம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இரவிலும் போராட்டம் நீடித்தது. 2-வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in