மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடி தாளமுத்துநகரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடி தாளமுத்துநகரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடந்தது. தாளமுத்து நகர்வடக்கு சோட்டையன் தோப்பு பகுதியில் நடைபெற்ற போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். ஆட்டோ தொழிலாளர் சங்க தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் முருகன், சிலுவைபட்டி விலக்கு ஆட்டோ நிறுத்த செயலாளர் சுதர்சன், உப்பு தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொறுப்பாளர் ஜான்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மேட்டுப்பட்டி மீனவர் பகுதியில் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளைத் தலைவர் ஆனந்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.பூமயில் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in