வேலூரில் வரும் 27-ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

வேலூரில் வரும் 27-ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
Updated on
1 min read

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 27-ம் தேதி விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் நடைபெற உள்ளது என ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் வரும் 27-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில், வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

கூட்டத்தில் கடந்த மாதம் விவசாயிகள் தரப்பில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது பதில் அளிக்கப்படும். விவசாயிகள் எழுப்பும் பிரச்சினைகள் தொடர்பாக பதில் அளிக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in