பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து  பி.முட்லூரில் சிஐடியூ ஆட்டோ சங்கம் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பி.முட்லூரில் சிஐடியூ ஆட்டோ சங்கம் ஆர்ப்பாட்டம்

Published on

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து புவனகிரி அருகே உள்ள பி.முட்லூர் எம்ஜிஆர் சிலை அருகில் புவனகிரி வட்ட சிஐடியூ ஆட்டோ சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் விஜய் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முத்து, மாவட்ட செயலாளர் பாபு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட இணை செயலாளர் ஜெயசீலன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

விருத்தாசலம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் வாகனங்களை இயக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. வாகன வாடகை உயர்த்தினால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வாடகை வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அதன் தலைவர் முருகன் தலைமையில் விருத்தாசலம் தலைமை தாபால் நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in