விவசாயிகளுக்கு பயிற்சி பட்டறை

விவசாயிகளுக்கு பயிற்சி பட்டறை
Updated on
1 min read

சிதம்பரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மாநில அளவிலான வர்த்தக தொடர்பு குறித்த 2 நாள் பயிற்சிப் பட்டறை நேற்று தொடங்கியது. சிதம்பரம் சார்-ஆட்சியர் மதுபாலன் தொடங்கி வைத்தார். வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) பிரேம் சாந்தி வரவேற்றார். சென்னை வேளாண் இணை இயக்குநர் (வேளாண் வணிகம்) சேகர், கடலூர் வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) ரமேஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in