பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து, திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலையானது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதோடு சமையல் எரிவாயு விலையும் உயர்ந்துள்ளது. இவற்றின் விலை உயர்வுக்கு எதிராகவும், விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒருபகுதியாக, திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருமாநல்லூர் சாலை பாண்டியன் நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் காயத்ரி முன்னிலை வகித்தார். சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

மகளிர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் கார்த்தீஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in