கடலூரில் மழைநீரில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு

கடலூரில் மழைநீரில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு
Updated on
1 min read

கடலூர் கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் நாகப்பன் மனைவி தனம்.(70). உடல் நிலை சரி இல்லாதவர். கடலூரில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு பெய்த மழையால் தனம் வீட்டின் உள்ளே தண்ணீர் சூழ்ந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார். தூக்கத்தில் கட்டிலில் இருந்து தவறி விழுந்தவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இது குறித்து கடலூர் புது நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in