பாம்பனில் புதிய ரயில் பாலம்

பாம்பனில் புதிய ரயில் பாலம்
Updated on
1 min read

பாம்பன் ரயில் பாலம், தூக்கு பாலம், புதிதாகக் கட்டப்பட்டு வரும் ரயில் பாலம் ஆகியவற்றை தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மால்யா நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டும் பணி இந்தாண்டு இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணி தற்போது 30 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்போதுள்ள ரயில் பாலம் சிறந்த உறுதித் தன்மையுடன் உள்ளது. இப்பாலத்தை ஐ.ஐ.டி. தொழில்நுட்பக் குழுவினர் சென்ஸார் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணித்து வரு கின்றனர். தற்போதுள்ள ரயில் பாலத்தில் நான்கு இரும்பு கர்டர்கள் மட்டும் மாற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in