போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது

போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் புதுமனை பகுதியைச் சேர்ந்த மாரி கார்த்திகேயன் என்பவரது மகன் முத்துமணி (19). இவர், அப்பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியிடம் காதலிப்பதாகக் கூறி தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாயார் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, முத்துமணியை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in