குப்பைகளை அகற்றி கோலமிட்டு தூய்மைப் பணியாளர்கள் விழிப்புணர்வு

குப்பைகளை அகற்றி கோலமிட்டு தூய்மைப் பணியாளர்கள் விழிப்புணர்வு
Updated on
1 min read

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுவதைத் தடுக்க பொதுமக்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு மண்டலத்திலும் தினமும் ஒரு பகுதியில் திறந்தவெளியில் கொட்டப்பட்ட குப்பையை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அகற்றி, அழகிய கோலமிட்டு வருகின்றனர். அப்பகுதி பொதுமக்களிடமும் திறந்தவெளியில் குப்பை கொட்ட வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.

அதன்படி, திருநெல்வேலி சந்திப்பு உடையார்பட்டி குடியிருப்புப் பகுதியில் திறந்தவெளியில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அப்புறப்படுத்தி, சுத்தம் செய்தனர். பின்னர், அப்பகுதியில் அழகான கோலமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

(படம் உள்ளது)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in