மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் அரியலூர் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளர் மணிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னதுரை, நிர்வாகிகள் துரை.அருணன், கிருஷ்ணன், துரைசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in