பெட்ரோல் உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், திருநின்றவூர் ஆகிய இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர் கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயன், மாவட்ட குழு உறுப்பினர் நடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதேபோல், செங்குன்றத்தில் நேற்று மாலை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.ஷேக் முஹம்மது அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in