உத்தமதானபுரத்தில் உ.வே.சா பிறந்த நாள் விழா

உத்தமதானபுரத்தில் உ.வே.சா பிறந்த நாள் விழா
Updated on
1 min read

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய் யரின் 167-வது பிறந்த நாள் விழா, அவர் பிறந்த ஊரான திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள உத்தமதானபுரத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு தமுஎகச வலங்கைமான் வட்டாரச் தலைவர் பாலசுந்தரம், செயலாளர் அந்தோனி பாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். உவேசா நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவு ஆகியவை நடை பெற்றன.

இதில், தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் பிறந்த நாளான பிப்.19-ம் தேதியை சங்கத் தமிழ் நூல்கள் பாதுகாப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in