பாளை.யில் ரத சப்தமி விழா

பாளை.யில் ரத சப்தமி விழா
Updated on
1 min read

பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோயிலில் ரத சப்தமியையொட்டி நேற்று இரட்டை கருட சேவையும், பெருமாள் 7 வாகனங்களில் ரதவீதி வலம் வரும் வைபவமும் நடைபெற்றது.பாளையங்கோட்டை ராஜகோ பால சுவாமி கோயிலில் ரத சப்தமியையொட்டி இரட்டை கருட சேவை நேற்று நடைபெற்றது.

பெருமாள் கோயில்களில் ரத சப்தமி நேற்று காலை முதல் மாலை வரையில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பெருமாள் 7 வாகனங்களில் ரதவீதி வலம் வரும் வைபவம் நடைபெற்றது. பாளை.ராஜகோபாலசுவாமி கோயிலில் இதையொட்டி நேற்று உற்சவர், மூலவருக்கு அதிகாலையிலேயே சிறப்பு திருமஞ்சனம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சூரியபிரபை வாகனத்தில் சுவாமி ரதவீதி வலம் நடந்தது. பின்னர் இரட்டை கருடசேவை ரதவீதி வலம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து, நேற்று மாலையில் ஆதிசேஷ வாகனம், இந்திர விமானம், அனுமன் வாகனம், அன்ன வாகனம், சந்திர பிரபை வாகனம் ஆகிய வாகனங்களில் அடுத்தடுத்து சுவாமி வீதியுலா கண்டருளினார். ஒரே நாளில் 7 வாகனங்களில் பெருமாள் வீதியுலா வருவதைக் காண பக்தர்கள் திரண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in