பாளை.யில் தர்ணா

பாளை.யில் தர்ணா
Updated on
1 min read

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற பள்ளி,கல்லூரி ஆசிரியர் நலச்சங் கம் சார்பில் தர்ணா நடத்தப்பட்டது.

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக்கல்லூரி எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் வி.ஆறுமுகம் தலைமை வகித்தார்.

மாநில செயற்குழு உறுப்பினர் டி. நல்லையா, மாவட்ட துணைச் செயலாளர் கே. அமராவதி ஆகியோர் முன்னிலை வகித்த னர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in