தம்பதிக்கு அரிவாள் வெட்டு

தம்பதிக்கு அரிவாள் வெட்டு
Updated on
1 min read

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியைச் சேர்ந்தவர்ஜேம்ஸ். கட்டிட தொழிலாளி. இவருக்கும்திருப்பூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநரான முகமது ரியாஸ்என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

நேற்று முன்தினம் இதுதொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அன்று இரவு ஜேம்ஸ் அவரது நண்பர்களுடன் முகமது ரியாஸ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது முகமது ரியாஸ் வெளியில் சென்றிருந்த நிலையில், அவரது தந்தை முகமது முஸ்தபாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். தடுக்கச் சென்ற அவரது மனைவி சகிதாபானுவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். திருமுருகன்பூண்டி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in