கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு

கிணற்றில் விழுந்து சிறுமி உயிரிழப்பு
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் மூலனூர் மேற்குபதி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். மனைவி முருகாத்தாள். இவர்களது மகள் கார்த்திகை செல்வி (13), மூலனூர்அரசுப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்துவந்தார். நேற்று தாயாருடன், வஞ்சிபாளையம் பிரிவு பகுதியில் சிறுமி ஆடு மேய்த்துள்ளார்.

அப்போது கிணறு அருகேசென்றஆட்டை விரட்ட முயன்றபோது, சிறுமி நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். வெள்ளகோவில் தீயணைப்பு துறையினர் சென்று சிறுமியின் உடலை மீட்டனர். மூலனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in