

கிறிஸ்தவ ஆலயங்களில் தவக் காலத்தின் தொடக்கமாக சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்துவின் பாடு களை தியானிக்கும் வகையில் ஆண்டு தோறும் 40 நாட்கள் கிறிஸ்தவர்கள் தவக்கால மாக அனுசரிக்கிறார்கள். இவ்வாண்டுக் கான தவக்காலம் நேற்று தொடங்கியது. இதை யொட்டி, சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனை ஆலயங் களில் நடைபெற்றது.
பாளையங்கோட்டையில் தூய சவேரியார் பேராலயத்தில் காலை 6 மணிக்கு சாம்பல் புதன் சிறப்பு திருப்பலியை மறைமாவட்ட ஆயர் அந்தோனிசாமி நிறைவேற்றினார். கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது. பங்குத்தந்தை ராஜேஷ், உதவி பங்குத்தந்தையர் மிக்கேல், பிரகாசம் ஆகியோர் பங்கேற்றனர். இதுபோல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங் களிலும் சாம்பல் புதன் பிரார்த் தனைகள் நடைபெற்றன.
இதை தொடர்ந்து வெள்ளிக் கிழமைகளில் திருச்சிலுவை வழிபாடு நடைபெறுகிறது. மேலும் தவக்கால திருப்பயணம், தியானம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. வரும் ஏப்ரல் 1-ம் தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது. அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் சடங்கும், அடுத்த நாள் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை தியானிக்கும் புனித வெள்ளி சிலுப்பாதை சடங்குகளும் நடைபெறுகிறது. இயேசு உயிர்த்தெழுந்ததை கொண் டாடும் ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்ரல் 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
தூத்துக்குடி
இதேபோல தூய பனிமய மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை குமார் ராஜா பக்தர்களின் நெற்றியில் சாம்பல் பூசிவிட்டார். தூத்துக்குடி புனித அந்தோனியார் திருத்தலம், லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயம், யுதா ததேயு திருத்தலம், மிக்கேல் அதிதூதர் தேவாலயம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
நாகர்கோவில்