கடையநல்லூர் விடுதியில் பெண் கொலை

கடையநல்லூர் விடுதியில் பெண் கொலை
Updated on
1 min read

சிவகிரி அருகே உள்ள மேல கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிராஜ் (45). கூலித் தொழிலாளி. ராயகிரியைச் சேர்ந்த மாலா (35) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் ஏற்கெனவே திருமணமானவர்கள்.

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தனியார் விடுதியில், இவர்கள் இருவரும் அறை வாடகைக்கு எடுத்து தங்கினர். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த ஊழியர்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கடையநல்லூர் போலீஸார் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு, மாலா கழுத்து அறுக்கப்பட்டு சடலமாகக் கிடந்தார். அந்தோணிராஜ் ரத்தக் காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். அந்தோணிராஜை மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், விடுதி அறையில் தங்கியிருந்தபோது தகராறு ஏற்பட்டதால் மாலாவை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, பயத்தில் அந்தோணிராஜும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in