கல் குவாரியில் சிறுவன் உயிரிழப்பு

கல் குவாரியில் சிறுவன் உயிரிழப்பு
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையிலுள்ள தனியார் குவாரியில் தங்கி, திருவண்ணாமலை மாவட்டம் தன்ராம்பட்டு மேல்பஜார் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் மகன் ரஞ்சித் (18) என்பவர் வேலை செய்து வந்தார். கல் உடைக்கும் கனரக இயந்திரம் பழுதானதால், அதனை பழுது பார்க்கும் பணி நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. யாரும் எதிர்பாராத நேரத்தில், குவாரியில் பணிபுரியும் மகேந்திரன் என்பவர் கனரக இயந்திரத்தை இயக்க முற்பட்டதாக தெரிகிறது. இதில், இயந்திரத்தின் ஒரு பகுதி இடித்ததில் ரஞ்சித் பலத்த காயமடைந்துள்ளார். பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். பல்லடம் போலீஸார் வழக்கு பதிந்து, மகேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in