காளை முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு

காளை முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு
Updated on
1 min read

கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதனைக் காண 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தி (26) என்பவர், ஒரு காளை மந்தையில் ஓடி வரும்போது, அதன் எதிரில் நின்றார். சீறிப் பாய்ந்து ஓடிய காளை தூக்கி வீசியதில் படுகாயம் அடைந்த சக்தியை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்தி உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in