விழுப்புரத்தில் நாளை மறுநாள் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

விழுப்புரத்தில் நாளை மறுநாள்  தனியார் வேலை வாய்ப்பு முகாம்
Updated on
1 min read

விழுப்புரத்தில் நாளை மறுநாள் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறகிறது. இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு இளை யோரை தேர்வு செய்கின்றன.

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்கள் "www.tnprivatejobs.tn.gov.in' என்ற இணையதள முகவரியில் தங்களது கல்வித்தகுதி விவரங்களை பதிவு செய்ய வேண்டும். தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயக்குறிப்பு ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும்விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்டவேலை வாய்ப்பு மையத்தை நேரிலோ அல்லது 04146 - 226417 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in