மத்தூர் அருகே ஜவுளி வியாபாரிகள் வீட்டில் திருட்டு

மத்தூர் அருகே ஜவுளி வியாபாரிகள் வீட்டில் திருட்டு
Updated on
1 min read

மத்தூர் அருகே ஜவுளி வியாபாரிகள் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாடரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் சுரேஷ் (45), சரவணன் (35). இவர்கள் 2 பேரும் அருகருகே வசித்து வருகின்றனர். இந்நிலையில நேற்று முன்தினம் 2 பேரும், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் ஜவுளி வியாபாரத்திற்காக பர்கூர் சென்றனர். இரவு அங்கே தங்கிவிட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்தனர். அப்போது 2 பேரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, சுரேஷ் வீட்டில் 3 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ரூ. 20 ஆயிரம் ரொக்கம், சரவணன் வீட்டில் 2 பவுன் தங்க நகை, எல்இடி டிவி உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தனர்.

இதுதொடர் பாக மத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in