‘மண்ணில் ரசாயனம்; உணவில் நச்சுத்தன்மை’

‘மண்ணில் ரசாயனம்; உணவில் நச்சுத்தன்மை’
Updated on
1 min read

ஊரக இளைஞர்களுக்கான உயிரியல் முறையில் பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு காரணிகளை உற்பத்தி செய்வது குறித்த 6 நாள் பயிற்சி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பெங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொடங்கியது.

வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா மற்றும் பயிர் பாதுகாப்புத் துறை விஞ்ஞானி பி.ஜி.கவிதா ஆகியோர் தொடங்கிவைத்தனர். இதுதொடர்பாக அவர்கள் பேசும்போது, ‘‘திருப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்படும் தென்னை, வாழை, மக்காச்சோளம், நெல் மற்றும் காய்கறிப் பயிர்களில் பூச்சி மற்றும்நோய் தாக்குதலால் மகசூல் இழப்புஏற்படுகிறது. ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதன் மூலமாக மண் மற்றும் சுற்றுச்சூழல் மாசடைகிறது. உணவுப் பொருட்களிலும் நச்சுத் தன்மை உருவாகிறது. இதைத் தடுக்க உயிரியல் முறைகளில் இயற்கையாக மேற்கண்ட பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியமாக உள்ளது’’ என்றனர். சோமனூர் மற்றும் அவிநாசியில் உள்ள உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி செய்யும் ஆய்வுக் கூடங்களுக்கு பயிற்சியாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in