பைக்-லாரி மோதல்: 2 பேர் உயிரிழப்பு

பைக்-லாரி மோதல்: 2 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

திருவள்ளூர்- லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வசேகர்(28). இவரது நண்பர், திருவள்ளூர் பத்தியால்பேட்டையைச் சேர்ந்த அஜித்குமார் (27). இவர்கள் இருவரும் டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

திருவள்ளூர், பெரியகுப்பம் பகுதியிலிருந்து செல்வசேகரும், அஜித்குமாரும் பணி முடிந்து, நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

திருவள்ளூர் - ஜெ.என்.சாலையில், சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிகவேகமாக வந்த கன்டெய்னர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த செல்வசேகர், அஜித்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

வழக்குப் பதிவு செய்த திருவள்ளூர் டவுன் போலீஸார், லாரி ஓட்டுநரான, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பாபா சகித்தை (57) கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in