குறிஞ்சிப்பாடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்

குறிஞ்சிப்பாடியில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்
Updated on
1 min read

குறிஞ்சிப்பாடியில் விடுதலைச்சி றுத்தைகள் கட்சியின் ஒன்றிய,நகர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் குறிஞ்சிப்பாடி மைய மற்றும்மேற்கு ஒன்றிய செயலாளர்கள் குரு, சிவசக்தி ஆகியோர் தலைமைதாங்கினர். சிறப்பு அழைப்பாளராக கடலூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், மாநில துணைச் செயலாளர் ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் என்எல்சி நிறுவனத்தில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற் முடிவு செய்யப்பட்டது. மேல புதுப்பேட்டையில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியை உடனடியாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in