காவல்துறையினருக்கு தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை

காவல்துறையினருக்கு  தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை
Updated on
1 min read

சட்டபேரவைத் தேர்தலின் போது காவல்துறையினர் எவ்வாறு தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

விழுப்புரம் சரக காவல் துணைத் தலைவர் எழிலரசன் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும், மக்கள் கூடும் இடங்களில் அளிக் கப்பட வேண்டிய சிறப்பு சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் நடைபெற்ற குற்றங்களை எவ்வாறு கண்டறிய வேண்டும்; சாலை விபத்துகளை எவ்வாறு தடுக்க வேண்டும் என்றும் அறி வுரைகள் வழங்கப்பட்டன. இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் கலந்து கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in