நெய்வேலி என்எல்சிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு கூடுதல் இழப்பீடு

கடலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற அமர்வில் என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு தனது நிலத்தை வழங்கியவருக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகையை ஓய்வுபெற்ற மாவட்ட தலைமை நீதிபதி சித்தார்த் வழங்கினார். அருகில் என்எல்சி இந்தியா நிறுவன நிலத்துறை தலைமைப் பொது மேலாளர் லட்சுமி காந்த ராவ்.
கடலூரில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற அமர்வில் என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு தனது நிலத்தை வழங்கியவருக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகையை ஓய்வுபெற்ற மாவட்ட தலைமை நீதிபதி சித்தார்த் வழங்கினார். அருகில் என்எல்சி இந்தியா நிறுவன நிலத்துறை தலைமைப் பொது மேலாளர் லட்சுமி காந்த ராவ்.
Updated on
1 min read

என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு மக்கள்நீதிமன்றத்தின் மூலம் கூடுதல்இழப்பீட்டுத் தொகை வழங்கு வதற்காக கடலூரில் மக்கள் நீதி மன்ற அமர்வு நடைபெற்றது. இதில், 47 பேருக்கு ரூ.3 கோடியே 32 லட்சத்திற்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

என்எல்சி இந்தியா நிறுவனத் திற்கு தங்கள் நிலங்களை வழங் கியதற்காக அரசு வழங்கும் வழி காட்டுதல் மதிப்பை விட கூடுதலாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என 01.01.2014க்கு பிறகுஅந்நிறுவனத்திற்கு தங்கள் நிலங்களை வழங்கியவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மன்றத்தின் உறுப்பினர்கள் முன்னிலையில் என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கும், நிலம் வழங்கியவர்க ளுக்கும் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்படி, அந்நிலங்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட் டுள்ள ஏக்கருக்கு ரூ. 5 லட் சம் அல்லது ரூ. 6 லட்சம் தொகை யையும் சேர்த்து மொத்தத்தில் ரூ.15 லட்சம் வழங்க இருதரப்பிலும் ஒத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், அண்மையில்கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சட்டப் பணிகள் ஆணைக்குழுவிற்கான அரங்கில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில், என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு தங்கள் 37.59 ஏக்கர் பரப்பிலான நிலங்களை வழங்கிய 47 பேருக்கு,மொத்தம் ரூ.3 கோடியே 32 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப் பட்டன.

ஓய்வுபெற்ற மாவட்ட தலைமை நீதிபதி சித்தார்த் பங்கேற்று காசோலைகளை வழங்கினார். என்எல்சி இந்தியா நிறுவன நிலத்துறை தலைமைப் பொது மோலாளர் லட்சுமி காந்த ராவ், துணைப் பொது மேலாளர் விவேகானந்தன் மற்றும் தமிழக அரசின் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தங்கள் 37.59 ஏக்கர் பரப்பிலான நிலங்களை வழங்கிய 47 பேருக்கு, மொத்தம் ரூ.3 கோடியே 32 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in