திருப்பத்தூரில் தற்காலிக வாரச்சந்தைக்கு எதிர்ப்பு

திருப்பத்தூரில் தற்காலிக வாரச்சந்தைக்கு எதிர்ப்பு
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பேரூராட்சி அலுவலகம் அருகே சனிக்கிழமைதோறும் சந்தை நடந்து வருகிறது.

கடந்த வாரம் சீரமைப்புப் பணிக்காக வாரச்சந்தையில் இருந்த கடைகளை பேரூராட்சி நிர்வாகம் இடித்தது. மேலும் வாரச்சந்தையை தற்காலிகமாக மதுரை சாலையில் தனியார் கல்லூரி அருகே பேரூராட்சி நிர்வாகம் மாற்றியது. ஆனால் அப்பகுதியில் போதிய வசதிகள் இல்லை எனக் கூறி வியாபாரிகள் கடைகளை அமைக்க மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில், திருப்பத்தூர் காய்கறிகள் வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகேசன், துணைத் தலைவர் தங்கபாண்டி, செயலாளர் சேட், துணைச் செயலாளர் சலீம் தலை மையிலான வியாபாரிகள் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில், பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் வாரச்சந்தைக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in