ஊராட்சி தலைவர்களுக்கு நீர்வள மேலாண்மை பயிற்சி

ஊராட்சி தலைவர்களுக்கு நீர்வள மேலாண்மை பயிற்சி
Updated on
1 min read

வேப்பனப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான நீர்வள மேலாண்மை பயிற்சி நடந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள், மகளிர் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளுக்கு நீர்வள மேலாண்மை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சென்னகிருஷ்ணன், பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய குழுத் தலைவர் சரோஜினி தலைமை வகித்தார். இதில், குடிநீர், விவசாயத்துக்குத் தேவையான நீரை சேமிப்பது குறித்தும், நிலத்தடி நீர்மட்டம் உயர, மழைநீர்சேகரிப்பு தொட்டி அமைப்பது, மழைக்காலங்களில் கால்வாய்களில் செல்லும் தண்ணீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டுவது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியை அலுவலர்கள் வாசுகி, மாதேஸ்வரி, நிக்கோலஸ் ஆகியோர் அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in