நூல் ஏற்றுமதியை கட்டுப்படுத்த வலியுறுத்தி தீர்மானம்

நூல் ஏற்றுமதியை கட்டுப்படுத்த வலியுறுத்தி தீர்மானம்
Updated on
1 min read

நூல் விலை உயர்வு, தடையில்லா மல் நூல் கிடைப்பதற்காக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில்நடைபெற்றது.

ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் தலைமை வகித்தார். ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் நலன் கருதி, நூல்ஏற்றுமதியை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டு, அக்குழு மூலமாக நூற்பாலைகள் சங்கங்களை அணுகி, நூல் விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென வலியுறுத்துவது, தங்குதடையின்றி நூல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜாப் ஒர்க் மற்றும்இதர மூலப்பொருட்களின் விலைஉயர்வை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என அனைத்து சங்கங்களிடம் வலியுறுத்துவது, இந்த அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உற்பத்தி யாளர்களுக்கு கேட்கும் விலை உயர்வை கொடுக்க வேண்டும்என வெளிநாட்டு இறக்குமதியாளர்களிடம் கோரிக்கை விடுப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in