திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம்

திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம்
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டத்தில் குடியிருக்கும் திருநங்கைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் வரும் பிப். 13-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சம்பந்தப்பட்ட குடிமைப்பொருள் வட்ட வழங்கல் அலுவலகங்கள் மற்றும் தனி வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

ஆதார் அட்டை, புகைப்படம்,எரிவாயுஇணைப்புப் புத்தகம் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுதல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் குடும்ப அட்டை வகை மாற்றம் ஆகிய கோரிக்கைகளின் மீது தீர்வு பெறலாம்.

இத்தகவல் மாவட்ட நிர்வாகத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in