வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் ஆறுமுத்தாம் பாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து. கடந்த 6-ம் தேதி குடும்பத்துடன் மதுரைக்கு சென்றுள்ளார். நேற்று (பிப்.10) காலை வீடு திரும்பியபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக் கப்பட்டு, திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்கநகைகள், ரூ.30 ஆயிரம் பணம் திருட்டுப் போயிருந்தன. புகாரின் பேரில் பல்லடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in