சிவகங்கை எஸ்பியிடம் ஸ்டாலின் மீது அதிமுகவினர் புகார்

சிவகங்கை எஸ்பியிடம் ஸ்டாலின் மீது அதிமுகவினர் புகார்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்ட எஸ்பி (பொறுப்பு) பிரபாகரனிடம் அதிமுக மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் அக்கட்சியினர் புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:

திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டியில் பிப்.8-ம் தேதி நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின் குரல்’ என்ற நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் பழனிசாமி குறித்து அவமரியாதையாகப் பேசியுள்ளார். நீதிமன்றம் அறிவுறுத்தியதை மீறி ஸ்டாலின் பேசியது அதிமுக வினருக்கு மன உளைச்சலையும், விவசாயிகள், பொதுமக்களிடையே களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரை அவதூறாகப் பேசிய ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

புகார் மனு அளித்தபோது, எம்ஜிஆர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் கருணாகரன், எம்எல்ஏ நாகராஜன், ஆவின் தலைவர் அசோகன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன். மணிபாஸ்கரன், பாம்கோ தலைவர் நாகராஜன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in