விசுவக்குடி அணையை திறந்ததால் பயிர்கள் சேதம் அன்னமங்கலத்தில் விவசாயிகள் மறியல்

விசுவக்குடி அணையை திறந்ததால் பயிர்கள் சேதம் அன்னமங்கலத்தில் விவசாயிகள் மறியல்
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடியில் உள்ள நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கே தெரியாமல் தண்ணீர் திறக்கப்பட்டது.

எவ்வித முன்னறிவிப்பின்றி நீர் திறக்கப்பட்டதால், அணையில் இருந்து வெளியேறிய நீரால் அருகிலுள்ள விவசாய நிலங்களில் இருந்த பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டன. பல வயல்களில் பயிர்கள் நீரில் மூழ்கின. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயிகள் பெரம்பலூர்-அன்னமங்கலம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, முன்னறிவிப்பின்றி அணையை திறந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினர். தகவலறிந்து அங்கு வந்த அரும்பாவூர் போலீஸார் மற்றும் பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் பெரம்பலூர்-அன்னமங்கலம் வழித்தடத்தில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது; எனது கவனத்துக்கு வராமலேயே தினக்கூலி பணியாளர் ஒருவர் நீர்த்தேக்கத்தை திறந்துவிட்டுள்ளார். அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in