விருதுநகர் அருகே வட்டாட்சியரின் ஜீப் ஓட்டுநர் கொலை

விருதுநகர் அருகே  வட்டாட்சியரின் ஜீப் ஓட்டுநர் கொலை
Updated on
1 min read

விருதுநகர் அருகே உள்ள ஆமத்தூரைச் சேர்ந்தவர் செல்வ குமார்(38). சிவகங்கையில் வட்டாட்சியரின் ஜீப் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று பிற்பகல் அப்பகுதியில் ஆடு திருடியவரை துரத்திப் பிடித்தார். அப்போது மர்ம நபர் செல்வகுமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ஆமத்தூர் போலீஸார் விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் என்பவர் செல்வகுமாரை கொலை செய்தது தெரிய வந்தது.

இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in