

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் குடியேற முயன்ற 62 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்பட்டது. `தெலங்கானா, புதுச்சேரியைப் போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவி தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம் 2016-ன்படி தனியார் துறை களிலும் 5 சதவீதம் பணிகளை உத்தரவாதப்படுத்த வேண்டும்’ ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் உபதலைவர் பி.தியாகராஜன் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 21 பெண்கள் உட்பட 62 மாற்றுத்திறனாளிகளை போலீஸார் கைது செய்தனர்.
தென்காசி
தூத்துக்குடி
கோவில்பட்டி
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் புவிராஜ் தலைமையிலும், கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழு உறுப்பினர் கருப்பசாமி தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்தது.
நாகர்கோவில்