3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்
Updated on
1 min read

வேலூரில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் அண்ணா சாலையில் உள்ள ஏலகிரி அரங்கம் வளாகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள், பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு,மாவட்டச் செயலாளர் கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இதில் தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் வழங்குவது போல் தமிழகத்திலும் மாற்றுத்திறனாளி களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றோர் களுக்கு ரூ.5 ஆயிரமும், வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட் டுள்ளனர்.

திருப்பத்தூர்

திருவண்ணாமலை

இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்டத் தலைவர் ரமேஷ் உட்பட 138 மாற்றுத்திறனாளிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in