தி.மலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

தி.மலை மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழுக் கூட்டம் தி.மலை அடுத்த வேங்கிக்காலில் நேற்று நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பார்வதி தலைமை வகித்தார். செயலாளர் அறவாழி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், "ரூ.2.57 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப் பணிகளை மேற்கொள்வது, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய மாவட்ட ஊராட்சி அலுவலகம் கட்டிக் கொடுக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in