மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கரூர், திருச்சி, பெரம் பலூரில் மின்வாரிய ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொழிற்சங்க விரோத, தொழிலாளர் விரோதப் போக்கை தொடர்ந்து கடைபிடிக்கும் மின் வாரிய தலைவர் பங்கஜ்குமார் பன்சால், இணை மேலாண்மை இயக்குநர் வினித் ஆகியோரை இடமாற்றம் செய்ய வேண்டும். மின்வாரியப் பணிகளை ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைக் கக் கூடாது. காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் தலைவர் விஜயகுமார் தலைமையில் கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலு வலகம் முன் நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒருங்கி ணைப்பாளர் பால்ராஜ், சிறப்புத் தலைவர் பரமேஸ்வரன், இணைச் செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருச்சியில்...

இதேபோல, மின் வாரிய மன்னார்புரம் மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம், தென்னூர் தலைமைப் பொறியாளர் அலுவலகம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள மின் வாரிய அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in