போலி இரிடியம் விற்க முயற்சி 11 பேர் போலீஸில் சிக்கினர்

போலி இரிடியம் விற்க முயற்சி 11 பேர் போலீஸில் சிக்கினர்
Updated on
1 min read

விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (35). ஆட்டோ ஓட்டுநர். இவர் தனது ஆட்டோவை விருதுநகர் - சிவகாசி சாலையில் நண்பர் சம்பத்துடன் சென்று பழுதுபார்க்கக் கொடுத்தார்.

பின்னர் இருவரும் அருகிலுள்ள கடையில் டீ குடித்தபோது அருகே நின்ற அடையாளம் தெரியாத 2 பேர் `இரிடியம் எனக்கூறி பித்தளைப் பானையை காரில் வரும் நபர்களிடம் விற்று கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக்கொண்டு தப்பிவிடலாம்' எனப் பேசிக்கொண்டிருந்தனர்.

இது குறித்து ஆட்டோ ஓட்டுநர் முத்துக்குமார் ஆமத்தூர் காவல்நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து போலீ ஸார் அப்பகுதியில் சந் தேகத்துக்கிடமாகச் சுற்றிய திரு நெல்வேலியைச் சேர்ந்த 11 பேரைப் பிடித்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in