மாடு முட்டியதில்தொழிலாளி உயிரிழப்பு

மாடு முட்டியதில்தொழிலாளி உயிரிழப்பு
Updated on
1 min read

திருப்பத்தூர் அருகே எருது விடும் விழாவில் மாடு முட்டிய தால் கூலித்தொழிலாளி உயிரி ழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த பலப்ப நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சிவராஜ் (50). இவர், நேற்று முன்தினம் திருப்பத் தூர் அடுத்த ரெட்டிவலசை பகுதி யில் நடைபெற்ற எருது விடும் விழாவில் வேடிக்கை பார்க்கச் சென்றார்.

அப்போது, தறிக்கெட்டு ஓடிய எருது ஒன்று, வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிவராஜை முட்டி தள்ளிவிட்டு ஓடியது. இதில், பலத்த காயமடைந்த சிவராஜ் மீட்கப்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குரிசிலாப்பட்டு காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in