கிருஷ்ணகிரியில் லாரி ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

கிருஷ்ணகிரியில் லாரி ஓட்டுநர்களுக்கு  இலவச கண் பரிசோதனை முகாம்
Updated on
1 min read

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் லாரி ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி பகுதியில் மாவட்ட ஒருங்கிணைந்த லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் நாராயணன், துணை பொருளாளர் அன்பு, செயற்குழு உறுப்பினர் குமார், இணை பொருளாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை தென் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகப்பா தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் பங்கேற்று, தங்கள் கண் களை பரிசோதனை செய்து கொண்டனர்.

இதில் குறைபாடு உள்ளவர் களுக்கு, இலவசமாக கண் கண்ணாடி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், இம்முகாம் வரும் 10-ம் தேதி வரை நடைபெறும் என்றும், இன்று முதல் 8-ம் தேதி வரை சுங்கச்சாவடி அருகிலும், 9 மற்றும் 10-ம் தேதிகளில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டேண்டிலும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறும் என wநிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in