விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன்: விற்பனைக்குழு கூட்டத்தில் தீர்மானம்

போச்சம்பள்ளி முதன்மைபதப்படுத்தும் நிலையத்தில் நடந்த தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் விற்பனைக்குழு கூட்டத்தில் தலைவர் தங்கமுத்து பேசினார்.
போச்சம்பள்ளி முதன்மைபதப்படுத்தும் நிலையத்தில் நடந்த தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் விற்பனைக்குழு கூட்டத்தில் தலைவர் தங்கமுத்து பேசினார்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி முதன்மை பதப் படுத்தும் நிலையத்தில், தருமபுரி - கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் விற்பனைக்குழு கூட்டம் நடந்தது. தலைவர் தங்கமுத்து தலைமை வகித்தார். துணை தலைவர் சிவபிரகாசம் முன்னிலை வகித்தார். விற்பனைக்குழு செயலாளர் அமுதவள்ளி வரவேற்றார்.

இக்கூட்டத்தில், விற்பனைக் குழுவின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, விவசாயி களுக்கு ஒழுங்கு முறை விற் பனை கூடங்கள் மூலம்,விளை பொருட்கள், விலை குறை வான காலங்களில் கிடங்கு களில் இருப்பு வைப்பது, விவசாயிகளுக்கு பொருளீட்டுக் கடன்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.இக்கூட்டத்தில் இயக்குநர்கள் முத்தம்மாள், தூயமணி, சுந்தரேசன், முருகன், சந்திரசேகர், ஜெகதீசன், முனியப்பன், வரலட்சுமி, அழகேசன், சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in