பூபால்ராயபுரம் அந்தோணியார் கெபி திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி பூபால்ராயபுரம் புனித அந்தோணியார் கெபி  திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கொடியேற்றம்.
தூத்துக்குடி பூபால்ராயபுரம் புனித அந்தோணியார் கெபி திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற கொடியேற்றம்.
Updated on
1 min read

தூத்துக்குடி பூபால்ராயபுரத்தில் புனித அந்தோணியார் கெபி அமைந்துள்ளது. இந்த கெபியின்40-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றம் நேற்று முன்தினம் இரவுநடைபெற்றது.

புனித அந்தோணியாரின் திருக்கொடியானது புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை விசந்தி சகாய உபர்ட்டஸ் தலைமையில் மந்திரிக்கப்பட்டு, ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில், தினமும் மாலை 7 மணிக்கு ஜெபமாலை பிரார்த்தனை மன்றாட்டு நடைபெறும்.

திருவிழா சிறப்பு நிகழ்வுகளாக 15.2.2021 அன்று மாலையில் புனிதஅந்தோணியார் திருவுருவ சப்பரபவனி நடைபெறும். புனித அந்தோணியார் பெருவிழா தினமான 16-2-2021 அன்று மதியம் அசனவிருந்து நடைபெறும்.

தொடர்ந்து மாலை ஆண்டுப் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பூபால்ராயபுரம் புனித அந்தோணியார் கெபி கமிட்டியினர் செய்து வருகின்ற னர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in