காஞ்சிபுரம், திருவள்ளூரில் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் 194 பேர் கைது

காஞ்சிபுரம், திருவள்ளூரில் அரசு ஊழியர்கள் மறியல்  போராட்டத்தில் 194 பேர் கைது
Updated on
1 min read

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 2-வது நாளாக மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 194 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

காஞ்சி காவலான் கேட் அருகே நடைபெற்ற போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் லெனின், மாவட்டச் செயலர் துரை.மருதன், அனைத்துத் துறைஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சாரங்கன் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதையடுத்து காஞ்சி மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட 67 பேரும், செங்கையில் மறியலில் ஈடுபட்ட 87 பேரும் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதில், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட 40 பேரை திருவள்ளூர் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in